Tuesday, June 26, 2012

இதுதான் நிஜமான ஆன்மீகச் சேவை பாகம் 3



ஒரு இஸ்லாமியத் தம்பதியினருக்கு திருமணமாகி,15 ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்தது.ஒரு நண்பர் மூலமாக நமது ஆன்மீக குரு  அவர்களை வந்து அந்த இஸ்லாமியத்  தம்பதியினர் சந்தித்தனர்.


அந்த தம்பதியர் இருவர்களின்  பிறந்த நேரப்படி பித்ரு தோஷம் இருப்பது அவ்ர்களைப் பார்த்ததும்,அவர்களுக்குத் தெரிந்தது.ஆனால்,அவர்களுக்கு பிறந்த ஜாதகங்கள் இல்லை;இந்த பித்ரு தோஷம் இருப்பதைப்பற்றி அந்த இஸ்லாமியத்தம்பதியிடம்  அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

(ஜோதிடப்படி,திருமணப்பொருத்தம் மட்டும் பார்த்து இக்காலத்தில் திருமணம் செய்வது தவறு;வரதட்சிணை அடிப்படையில்  திருமணம் செய்விப்பதும்தவறு;         வேறு தோஷங்கள் இருக்கின்றனவா? அப்படி இருந்தால்,அந்த தோஷங்களை நிவர்த்தி செய்துவிட்டார்களா? என்பதையும் பார்க்க வேண்டும்.

ஒரு தம்பதியினரின் பிறந்த ஜாதகத்தில் கணவன் அல்லது மனைவிக்கு பித்ரு தோஷம் இருந்தாலே,அவர்களுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்காது;அல்லது மிகவும் தாமதமாகக் கிடைக்கும்;

 எனது ஜோதிட அனுபவப்படி பெரும்பாலான தம்பதிகளில் இருவருக்குமே கடுமையான பித்ரு தோஷம் இருக்கிறது.அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு குழந்தை இருப்பதில்லை;அல்லது பூர்வீகச் சொத்துக்களில் பிரச்னைகள் இருக்கின்றன.ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 3,5,9 இல் இராகு அல்லது  கேது இருந்தால் அவர்களுக்கு  பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தம்!!!)

அவர்களோ எங்களுக்கு ஒரே ஒரு குழந்தையாவது வேண்டும்.நீங்கள்தான் எங்கள் ஆன்மீக குருவாக இருந்து,வழிகாட்ட வேண்டும் என்று மன்றாடி,தங்களுடைய கடந்த கால மருத்துவரீதியான முயற்சிகளையும்,ஆன்மீக ரீதியான தேடுதல்வேட்டையையும் விவரித்தார்கள்.

நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் என்னும் ஊருக்கு அருகில் விஜயாபதி என்னும் கிராமம் இருக்கிறது.அங்கே ஒரு சிவன் கோவில் இருக்கிறது.அந்தக்கோவிலில் உங்கள் இருவருக்கும் நவகலச யாகம் என்ற யாகம் நடத்த வேண்டும்.அப்படி நடத்தினால்,உங்களுடைய பித்ரு தோஷங்கள் நீங்கி,குழந்தை கிடைக்கும்.இதைச் செய்ய உங்களுக்குச் சம்மதமா? என்று  அவர்கள் கேட்டார்.அவர்களும் ஒப்புக்கொண்டனர்.
நவகலசயாகம் செய்து முடித்த 60 நாட்களில் அந்த இஸ்லாமியப் பெண் கருவுற்றார்.குழந்தை பிறந்து சில மாதங்களுக்குப்பிறகு,குழந்தையோடு நமது ஆன்மீக குரு  அவர்களை சந்தித்து,குழந்தைக்கு ஆசி பெற்றனர்.ஆசி பெற்ற கையோடு,தங்கள் ஆண் குழந்தைக்கு  பெயர் வைக்கக் கோரினர்.சிவமுகமது என்று பெயர் சூட்டப்பட்டது.இந்தப் பெயரை அவர்களின் ஜமா அத்தும் ஏற்றுக்கொண்டது.

விஜயாபதியில் இருக்கும் விஸ்வாமித்ர மஹாலிங்க சுவாமி திருக்கோவிலில் முறைப்படி நவகலசயாகம் செய்தால்,பித்ரு தோஷம் உள்ளிட்ட 64 விதமான தோஷங்கள் நீங்கும் என்பது கடந்த 25 வருடங்களாக நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.


2 comments:

  1. மிக அருமையான விஷ்யம். நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகிலுள்ள விஜயாபதிக்கு செல்லும் வழித்தடம் மற்றும் சிவன் கோவிலுள்ள அர்ச்சகரின் தொலைபேசி எண் முத்லியன கிடைத்தால் நன்றி பயக்கும்.

    ReplyDelete
  2. தங்களுடையை குடும்பத்தாரின் ஜாதகங்களை எமக்கு அனுப்பி வைக்கவும்.அவைகளில் யாருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து,உங்களுக்குத் தெரிவிப்போம்;அதன்பிறகு,உங்கள் குடும்பத்தாரின் சம்மதத்தோடு,பித்ருதோஷம் இருப்பவர்களின் பெயர் நட்சத்திரத்தை கோவிலில் பதிவு செய்வோம்;அப்படி பதிவு செய்தபின்னர்,கோவிலிலிருந்து எங்களுக்கு தங்கள் பித்ருதோஷ நிவாரணம் செய்ய உத்தரவு வரும்.அதன்பிறகு நாங்களே தங்களை அழைத்துச் செல்வோம்.இந்த வழிமுறையில் இல்லாமல் தாங்களே விஜயாபதிக்குச் சென்று நவகலசயாகம் செய்வது முறையானது அல்ல;முறைப்படி நவகலசயாகம் செய்ய விரும்பினால் எங்களை அணுகவும்.

    ReplyDelete