Friday, June 18, 2010

இந்துக்களின் மந்திரசக்தி பற்றிய ஒரு ஆராய்ச்சி முடிவு



ஜப்பானைச் சேர்ந்த மசாரு இமாட்டோ என்ற விஞ்ஞானி,தண்ணீரின் மூலக்கூறுகள் எந்தெந்த சூழ்நிலைகளில் எப்படி மாறுகின்றன? என்பதைப் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தார்.அதில் கிடைத்த தகவல்கள் திகைப்பூட்டுவதாகவும்,நமது புராதன இந்துதர்மத்தின் விஞ்ஞானபூர்வத்தையும் நிரூபிப்பதாக இருக்கிறது.

ஒரு தண்ணீர்த்துளியை நுண்ணோக்கி எனப்படும் மைக்ரோஸ்கோப்பில் வைத்து பெரிதாக்கி படம் எடுத்துக்கொள்கிறார்.பிறகு,அந்த (கொஞ்சம்) தண்ணீரானது ஒரு இந்துமந்திரம் ஜபம் செய்த பின்னர் மீண்டும் ஒரு துளி தண்ணீரை படமெடுத்தால்,மிக அழகான பூ அல்லது பழத்தின் வடிவத்தில் அந்த தண்ணீரின் மூலக்கூறு மாறிவிடுகிறது.

அதே துளித்தண்ணீரைக் கொண்டு,ஒரு நாட்டுப்புறப்பாடலைப் பாடிவிட்டு,மீண்டும் படமெடுத்தால்,அந்த தண்ணீரின் மூலக்கூறு மேலே உள்ளதைப் போல வடிவமெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

மனதின் சக்தியே பெரிது என்பதை 20,000 ஆண்டுகளுக்கு முன்பே நமது ரிஷிகள்,துறவிகள்,மகான்கள்,கவிஞர்கள் பாடியதை பல வருடங்களாக முட்டாள் கம்யூனிஸ்டுகளும்,விதாண்டாவாதம் கொண்டுள்ள நாத்திகவாதிகளும் நக்கல் செய்துவந்தனர்.அதுமாபெரும் தவறு என்பது இந்த ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.

தவிர,நாம் வாழும் வீடு,இருப்பிடம்,அலுவலம் என எல்லாப்பகுதியையும் அன்பும் பண்பும் நிறைந்ததாக மாற்றிவிடலாம்;அப்படி மாறியதை படமாகவும் (கிர்லியன் கேமிரா மூலமாக) படமும் பிடிக்கலாம்.

மேலும் விபரமறிய www.masaru-emoto.net/english/ephoto.html

1 comment:

  1. அருமை ஐயா, மந்திரத்தின் வலிமையை விஞ்ஞானபூர்வமாக நிரூபித்துள்ளார்கள். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். n

    ReplyDelete