Tuesday, April 13, 2010

விக்ருதி தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

விக்ருதி தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எனதருமை ஆன்மீகக் கடல் வாசகர்கள் அனைவருக்கும் எனது விக்ருதி வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த வருடத்தில் இலங்கையில் வாழும் நமது ரத்த சொந்தங்கள் நிம்மதியாக வாழ நாம் இறைவனை பிரார்த்திப்போம்.உலகின் மூத்த இனமான நம் தமிழ் இனத்துக்கென்று ஒரு நாடு உதயமாக எனது குல தெய்வத்தை வேண்டுகிறேன்.

தன்னலமற்ற அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு வேலை செய்யும் தமிழர்களால் உலகம் முழுவதும் இருக்கும் மென்பொருள்,பங்குச்சந்தை,அரசாங்கம்,ஜோதிடம்,உயிர்த்தகவலியல், ராணுவ ஆராய்ச்சி என பல துறைகள் புதிய சாதனைகளைப் படைக்கின்றன.
ஐ.நா.சபை,இந்திய தேசம்,விண்வெளி ஆராய்ச்சி,உலக வர்த்தக அமைப்புக்களில் விரைவில் தமிழ் இன சாதனையாளர்கள் தலைமை பீடத்தை அலங்கரிப்பார்கள்.
விக்ருதி வருடத்தில் இந்தியாவின் தலைமை பீடத்தை சித்தர் பெருமக்கள் ஆசி பெற்ற ஒரு மாவீரன் கைப்பற்றுவான்.தமிழர்களின் மதமாகிய இந்துதர்மம் இந்த வருடத்திலிருந்து 300 ஆண்டுகளுக்கு உலகம் முழுக்கப்பரவும்.உலகில் போர்,நிறவெறி படிப்படியாக நீங்கும்.தமிழ் ஈழம் மலரும்.பிரபாகரன் தமிழ் ஈழத்தின் அதிபர் ஆவார்.

வாழ்க தமிழ் இனம்; வெல்க தமிழ் உலகம்;பரவுக இந்துதர்மம்.

1 comment:

  1. ஐயா, வணக்கம்

    தங்கள் பதிவுகளை கடந்த ஓராண்டாக
    படித்து வருகிறேன். 2009 செப்டம்பருக்கு பிறகு இந்தியாவிலும் இலங்கையிலும் மாற்றங்கள் வரும் என்று கூறிவருகிறீர்கள். ஆனால் ஆறு திங்கள் கடந்துவிட்டது. நிலைமை மிகவும் மோசமாக போய்க்கொண்டு இருக்கிறது. நானும் தமிழீழம் அமைந்தால் பழநி முருகனுக்கு நடை பயணம் சென்று முடி காணிக்கை செலுத்துவதாகவும், குல தெய்வத்துக்கு 1001 ரூபாய் காணிக்கை செலுத்துவதாகவும் வேண்டியிருக்கிறேன்.

    இறைவன் சித்தம் என்னவென்று தெரியவில்லை. பொறுத்திருப்போம்.

    இப்படிக்கு
    தி. லெட்சுமணன்

    ReplyDelete