Thursday, February 4, 2021

தீராத இருமலை தீர்க்கும் திருப்புகழ் பாடல்

 தீராத இருமலால் அவதிப் படுவோருக்கு திருப்புகழிலிலிருந்து ஒரு பாடலைப் பாடுவார்கள்.

தற்போதய புதிய வைரஸ் தாக்கம் இருமலில்தான் ஆரம்பம். தொண்டை வரட்சியும் ,இருமலும், சளியும் உண்டு.
ஒரு தம்ளர் ஆறிய நீரில் சிட்டிகை விபூதியை இட்டு, வலது கையால் மூடிக் கொண்டு இந்தப் பாடலை ஆறு முறை ஓதி, அந்த நீரை அருந்தினால் மேற்கண்ட அவதிகள் தீரும். எந்த வைரஸும் நெருங்காது. அருணகிரிநாதரின் திருப்புகழ், திருத்தணித் தலத்தில் பாடப்பட்டது.
சகல ரோக நிவாரணி. அந்தப் பாடல் நமது நட்புக்களுக்காக இதோ:-
"இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுள தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப
தாதி மடியஅ நேக இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!"
மேலேயுள்ள அனைத்து நோய்களும் நீங்கும்.
தற்போதுள்ள கால நிலைக்கு தினமும் இருவேளை ஓதி நீர் அருந்த நலமாம்.

Varahi Sadayapar, Karthikeyan and 2 others

No comments:

Post a Comment