Friday, April 12, 2019

நடைமுறை வாழ்க்கையில் ஜோதிடம்




நடைமுறை வாழ்க்கையில் ஜோதிடம்



உங்கள் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிவிட்டதா? உடனே,அக்குழந்தைக்கு ஜாதகம் கணித்து,எழுதி வாங்கி விடுங்கள்;உங்கள் பெற்றோர் அல்லது உங்கள் வாழ்க்கைத் துணையின் பெற்றோரின் அறிவுறுத்தல் படி செயல்பட வேண்டாம்; அவர்கள் “குழந்தை பிறந்து 1 ஆண்டு ஆன பின்னர் ஜாதகம் எழுதிக் கொள்ளலாம்” என்பார்கள்;அது இன்றைய வேகமான கால கட்டத்திற்கு அவசியம் இல்லை;


பால அரிஷ்ட தோஷம் என்று ஒரு தோஷம் 1980 வரை நமது தமிழ்நாட்டில் பரவலாக (பிறக்கும் குழந்தைகளுக்கு) இருந்தது;இப்போது அது கிடையாது;


பால அரிஷ்ட தோஷம் என்றால்,ஒரு குழந்தை பிறந்தது முதல்  3 வயது முடியும் வரை அதை பல்வேறு நோய்கள் தாக்கும்;அதனால்,மரணம் அடைந்த குழந்தைகள் 1980 வரை அதிகமாக இருந்தது; இப்போது,மருத்துவமும்,மருத்துவ ஞானம் பற்றிய விழிப்புணர்ச்சியும் நம்மிடையே மிகவும் அதிகமாகிவிட்டது;அதனால்,கர்ப்பிணியாக இருக்கும் காலத்தில் இருந்தே பலவிதமான சத்து மாத்திரைகள்,டானிக்குகள்,உணவுகள் சாப்பிடுவதால்,தாயும் சேயும் நலமாக இருக்கின்றன;இந்த கால மாற்றத்தால் பால அரிஷ்ட தோஷம் அழிந்தே விட்டது;


முற்காலத்தில் ஒரு நாட்டின் மன்னனுக்கு குழந்தை பிறந்தால்,பிறந்த உடனே அக்குழந்தைக்கு ஜாதகம் கணித்து,எழுதி விடுவார்கள்;நாட்டு நலன் கருதி! இன்றைய ஜனநாயக நாட்டில்,நாம் ஒவ்வொருவருமே இந்நாட்டு மன்னர்கள் தானே! எனவே,உங்கள் குழந்தை பிறந்த ஒரு மாதம் ஆனதும் ஜாதகம் எழுதி விடுங்கள்;


கணினியில் கணிக்கப்படும் ஜாதகங்களுக்கு ஆத்ம பலம் இல்லை;எனவே,ஜோதிடரிடம் நேரில் சென்று அவர் மூலமாக ஜாதகம் எழுதி வாங்குவது அவசியம்;


எம்மிடம் ஜாதகம் எழுதி வாங்கலாம்;கட்டணம் உண்டு;இந்தியாவுக்கு 30 நாட்களுக்குள் கூரியரில் உங்களுக்கு கிடைத்துவிடும்; இந்தியாவுக்கு வெளியே வசிப்பவர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக மட்டுமே ஜாதகம் அனுப்ப முடியும்;

சிலர் ஆயுள் காலப் பலன்களை புத்தகமாக எழுதி வாங்குவதும் உண்டு;இரண்டு நிலைகளைக் கடந்த பின்னர்,ஆயுள் கால பலன்களை உங்கள் ஜாதகத்திற்கு எழுதித்தருகின்றோம்;


1 ஆம் நிலை:வளமான எதிர்காலம் உங்களுக்கு உங்கள் ஜாதகப்படி இருக்கின்றதா? என்பதை பார்க்க வேண்டும்;

2 ஆம் நிலை: அப்படி இருந்தால்,தாங்கள் 60 முதல் 90 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்;

விருப்பம் உள்ளவர்கள்; எமது வாட்ஸ் அப்: +91 9092116990 என்ற எண்ணுக்கு செய்தி அனுப்புங்கள்;பேச முயற்சிக்க வேண்டாம்;ஆடியோ அனுப்பலாம்;

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பிறந்த ஜாதகம் அவசியமா? ருது ஜாதகம் அவசியமா? என்று கேட்டால் பிறந்த ஜாதகம் தான் முக்கியம்;ருது ஜாதகத்தை துல்லியமாக கணிக்க முடியாது;அது திருமண வாழ்க்கையைப் பற்றிய விளக்கங்களைத் தரக் கூடியது;பிறந்த ஜாதகமே முக்கியம்;இன்றும் தமிழ்நாடு முழுவதும் மகன் பிறந்தால் அவனுக்கு ஜாதகம் எழுதுவதும்,மகள் பிறந்தால் அவளுக்கு பிறந்த ஜாதகம் எழுதாமல் இருப்பதும் தொடர்கின்றது;

15 வயது முதல் 35 வயது வரை அரைகுறை ஜோதிடர்களைக் கண்டு,அவர்களுடைய முழுமையற்ற பலனைக் கேட்டுக் கேட்டு பலர் வெறுத்துப் போயிருக்கின்றார்கள்:அதனால், உண்டாகும் எரிச்சலால் தனது ஜாதகத்தையே கிழித்து எறிபவர்களும் இருக்கின்றார்கள்;இது மாபெரும் தவறு;இதனால்,பைரவ தோஷம் அவர்களை பீடிக்கும்;வாழ்நாள் முழுவதும் முக்கியமான சம்பவங்கள் நடைபெறும் காலத்தில் தவிக்க வேண்டி இருக்கும்;


இவர்கள் இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன் என்று பைரவர் சன்னதியில் ஒரு முறை சத்தியம் செய்ய வேண்டும்; அதன் பிறகு,ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஒரு நாளுக்கு 108 முறை எழுத வேண்டும் அல்லது ஜபிக்க வேண்டும்; இப்படி 108 நாட்கள் செய்து வர வேண்டும்;




தனது அப்பா அல்லது அம்மா பிரபல ஜோதிடராக வாழ்ந்து வரும் போது அவரை மதிக்காமல் இருந்து,அவர் இறந்த பின்னர் அவர் சேகரித்த ஜோதிட நூல்களை எரித்த மகன்கள் தமிழ்நாடு மற்றும் ஸ்ரீலங்காவில் இன்றும் இருக்கின்றார்கள்:இவர்களுக்கு மிகவும் கடுமையான,பரிகாரத்திற்கு உட்படாத தோஷங்கள் பீடிக்கும்;ஆனாலும்,அதில் இருந்து மீள வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு மட்டும் பல ஆண்டுகளுக்குப்பிறகு வருவது உண்டு;


அவர்கள்,குறைந்தது 10 ஆண்டுகள் வரை(அதிக பட்சம் 40 ஆண்டுகள் வரை) தினமும் ஒரு மணி நேரம் வரை கால பைரவ ஜபம் செய்ய வேண்டும்;வீட்டில் அல்லது கோவிலில் கால பைரவர் சன்னதியில் ஜபித்து வர வேண்டும்; மேலும்,ஒரு கால பூஜை நடைபெறும் பழமையான சிவாலயங்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன;அதில் ஏதாவது ஒரே ஒரு கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்று பைரவ பூஜை நடைபெற முயற்சி செய்ய வேண்டும்;அந்த தேய்பிறை அஷ்டமி பூஜை தொடர்ந்து 10 ஆண்டுகள் நடைபெற்று வருமாறு தனது அக்கறையை செலுத்த வேண்டும்;


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தில்  பலருக்கு ஹ்ரீம் என்ற உச்சரிப்பு சரியாக வராது;அப்படி வராதவர்கள் ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்று ஜபித்தாலும் போதுமானது;


பைரவர்கள் வாழும் உலகத்திற்கு பைரவ உலகம் என்று பெயர்;எட்டு விதமான பைரவ உலகங்கள் இருக்கின்றன;அதில் ஒரு பைரவ உலகத்தில் வாழ்ந்து வருபவர் தான் ஸ்ரீவார தாரக சித்தர் ஆவார்;இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய காலக் கணக்கினை உருவாக்கியவர்;


ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி என்று கிழமை வரிசையை உருவாக்கியவர் இவரே! பைரவப் பெருமானின் அருளால் இதை உருவாக்கினார்;இவரை தொடர்ந்து பல ஆண்டுகள் உபாசனை செய்து வந்தவர்களே ஆர்ய பட்டர்,பாஸ்கராச்சாரியார்;அதனால் தான் இவர்களால் ஆர்ய பட்டீயம்,பாஸ்காராச்சார்யம் என்ற புகழ் பெற்ற ஜோதிட நூல்களை உருவாக்கிட முடிந்தது;


இந்த கருத்தினை பரப்பவேண்டும்;ஜோதிடர்களுக்கு ஆண்டு தோறும் பஞ்சாங்கம் வாங்கி அன்பளிப்பாக தர வேண்டும்;ஜோதிடர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் உண்டாகும் பிரச்சினையில் இருந்து காப்பாற்ற வேண்டும்;இப்படி 10 முதல் 40 ஆண்டுகள் வரை பைரவ சேவை செய்து வருவதால்,30% முதல் 60% வரையிலான தோஷத்தை குறைக்க முடியும்;


No comments:

Post a Comment