Sunday, October 7, 2018

உலகம் முழுவதும் பரவியிருக்கும் முருக கடவுள் வழிபாடு!



உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் இம்மூன்றையும் படைத்தவர் உருவம் இல்லாத ஈசன்! அந்த ஈசன் சிவலிங்க வடிவில் உலகம் முழுவதும் அருள்பாலித்துவருகின்றார்;கலியுகம் உருவாகும் வரையில்,இன்றைக்கு 5119 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் 1000 கோடி சிவாலயங்கள் இருந்திருக்கின்றன;தற்போது,பாரத நாட்டில் மட்டும் 1 கோடி ஆலயங்களாக மிஞ்சி இருக்கின்றன;ஈசனின் முதல் படைப்பு தான் முருகக் கடவுள்!

ஈசனையும்,முருகனையும் மனிதனாகிய நாம் நேரடியாக தரிசிக்க வேண்டும் என்றால்,குறைந்த பட்சம் 12 பிறவிகள் விடாமுயற்சி செய்ய வேண்டும்;அப்படி விடாமுயற்சி செய்தால்,12 வது அல்லது 13 வது பிறவியில் சிவதரிசனம் அல்லது முருகக் கடவுள் தரிசனம் கிடைக்கலாம்;

ரெஜித்குமார் என்பவர் திருச்சூரில் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகின்றார்;இவருக்கு சிறுவயது முதல் முருக பக்தி அதிகம்;இவரது தாயும்,தந்தையும் இறந்த பின்னர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்;அதன் விளைவாக,நாத்திகவாதியாக மாறிவிட்டார்;அப்போதும்,அவரது தேடல் தொடர்ந்திருக்கின்றது;அதன் முடிவாக மீண்டும் முருக பக்தராகவும்,ஆராய்ச்சியாளராகவும் ஆகியிருக்கின்றார்;
பழனிமலைக்கு கேரள மக்கள் பல நூற்றாண்டுகளாக வருகை தந்து வழிபடுவது வழக்கம்;இது குமரிக்கண்டம் தோன்றியதில் இருந்து (சுமார் 50,00,000 ஆண்டுகள்) இன்றுவரை தொடருகின்றது;

2006 முதல் 2013 வரை திரு.ரெஜித்குமார் உலகம் முழுவதும் பயணித்திருக்கின்றார்;முருக கடவுள் வழிபாடு உலகில் எந்தெந்த நாடுகளில் இருந்திருக்கின்றன என்பதை அறியவே பயணம் செய்து ஆதாரங்களையும் வரலாற்றுப் பூர்வமாகவும்,தொல்லியல் சான்றுகள் மூலமாகவும் திரட்டிவிட்டார்;

குமரிக் கண்டம் என்ற லெமூரியக் கண்டத்தில் குமரக் கடவுள் என்ற முருகக்கடவுள் வழிபாடு உச்சத்தில் இருந்திருக்கின்றது;மனிதன் நாகரீகம் அடைந்து முதன் முதலில் வாழ்ந்த இடம் குறிஞ்சி!இங்கே வேட்டையாடுவதுதான் மனிதனின் ப்ரதான தொழில்! வேடர் குலப் பெண் வள்ளியை முருகக் கடவுள் திருமணம் செய்தார் என்று வாசித்திருக்கின்றோம்;இதுதான் முதல் ஆதாரம்;


பூடான் நாட்டில் டைகர் மலையானது,திபத் மதத்தின் முதல் மத குரு (ரிம்போச்சே) பத்ம சம்பவர் வாழ்ந்த இடம் ஆகும்;இங்கே முருகக் கடவுள் வழிபாடு இருந்திருப்பதை பத்ம சம்பவர் வாழ்க்கை வரலாற்றில் இருந்து அறிய முடிகின்றது;
பாலித் தீவு இந்தோனோஷியாவில் ஒரு பகுதி ஆகும்;இங்கே புரா பெசாகி(PURA BESAKIH) 86 க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன;இங்கே,வாசுகி என்ற நாகம் முருகக் கடவுளை வழிபட்டது;இப்பகுதியில் காணப்படும் புராணக் கதை மூலமாக இதை உணரலாம்;


தாய்லாந்தில் பட்டாயா என்ற இடத்தில் தி ட்ரூத் (Sanctuary of Truth) ஆலயம் சென்ற போது,அங்கிருந்த பழமையான ஓவியத்தில் இருந்த திரு உருவம் முருகப் பெருமானின் ஆதி வடிவை ஒத்திருந்தது;இதை அங்கிருந்த சுற்றுலா வழிகாட்டி தெரிவித்தார்;

இங்கிலாந்தின் டிராகன் மலையின் மண்ணுக்கும்,இலங்கையின் கதிர்காம மண்ணும் ஒரே மாதிரியான மண் அமைப்பைக் கொண்டிருக்கின்றது;

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் உள்ள நீல மலைத் தொடர்களில் (Blue Mountain) செய்த ஆய்வுகளின் முடிவாக குமரிக் கண்டத்தில் நடைபெற்ற பெரும் யுத்தத்தின் சான்றுகள் கிடைத்துள்ளன;குமரிக்கண்டத்து மக்கள் எப்போதும் வடக்கு நோக்கியே திருச்செந்தூர் முருகனை நினைத்து வழிபடுவது வழக்கம்;தினமும் காலையில் வடக்கு நோக்கி(இன்றைய கன்னியாக்குமரியில் இருந்து 2800 கி மீ வரை பரவியிருந்தது குமரிக்கண்டம்) கை எடுத்து கும்பிட்டுவிட்டே அன்றாடப் பணிகளைத் துவக்குவது வழக்கம்;குமரிக்கண்டத்தின் வடக்கு எல்லையில் உயரமான மலைப்பகுதியாக கெந்தமாதன பர்வதம் விளங்கியிருக்கின்றது;1600 களில் இது கடலில் மூழ்கியதால் தான் இன்றைய செந்திலாண்டவர் கோவிலை மூன்று சாதுக்கள் திருச்செந்தூரில் கோவிலாக கட்டினார்கள்;படகோட்டிகள் மூலமாக,திருச்செந்தூர் கோவிலுக்கு நேர் கிழக்காக 2.5 கி மீ பயணித்தால்,கடலுக்குள் மூழ்கி இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலின் வெளிப்பிரகாரச் சுற்றுச் சுவரின் மேல் பகுதியைத் தொட்டுக் கும்பிட முடியும்;


திருச்செந்தூரில் பஞ்சலிங்கத்தை வழிபட்டுவிட்டு,முருகக் கடவுள் அன்றைய போர்க்களத்தில் 2000 கி மீ தொலைவு வரை போரிட்டவாறே சென்று இன்றைய ஆஸ்திரேலியாவின் நீல மலைப்பகுதியில் சூரனை சம்ஹாரம் செய்திருக்கின்றார்;ஒரு ராணுவம் 2000 சதுர கி மீ பரப்பளவுக்கு பரவியிருந்து போரிட்டு இருந்தால் எத்தனை கோடி போர்வீரர்கள் அதில் பங்கெடுத்திருப்பார்கள்!!!


நீலமலையில் ஜெலோவின் கேவ்ஸ் எனப்படும் குகையில் முருகப் பெருமானின் திருப்பாதம்  பதிந்திருக்கும் இடத்தையும் தரிசிக்கலாம்;
தென் கொரியா,வடகொரியா,மலேசியா,சிங்கப்பூர் என தென் கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் முருகக் கடவுளின் வழிபாடும் சித்தர் பெருமக்களின் நடமாட்டங்களும் இன்று வரை அதிகமாக இருக்கின்றன;


ஆதியில் குமரிக் கண்டத்தில் தோன்றிய குமரக்கடவுள் வழிபாடு,உலகம் எங்கும் மீண்டும் தழைத்தோங்க ஆரம்பிக்கும்;அப்போது,உலகில் சத்தியமும்,தர்மமும் ஓங்கி நிற்கும்;


லயன் மயூரா ராயல் கிங்டம் என்ற அமைப்பை இவர் நடத்தி வருகின்றார்;நன்றி:சக்தி விகடன்,பக்கங்கள் 78 டூ 81,வெளியீடு 9.10.2018 மற்றும் பல முருக பக்தர்கள் மற்றும் முருகக் கடவுள் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் வெளியீடுகள்

வேலுண்டு;வினையில்லை;மயிலுண்டு;பயமில்லை;



ஒரு கோடி முறை முருகா,முருகா என்று இப்பிறவிக்குள் யார் ஜபிக்கின்றார்களோ அவர்களுக்கு முருக சித்தர் ஒருவரின் வழிகாட்டுதல் கிடைக்கத் துவங்கும்;

No comments:

Post a Comment