Saturday, September 1, 2018

ஜோதிட அறிவியல் மூலமாக தன்னை வளப்படுத்தி வரும் மேற்கு உலகம்!!!


உலகத்தில் நடைபெறும் ஒவ்வொரு சிறுசெயலுக்குப் பின்னாலும் நவக்கிரங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன;அதைப் பற்றிய அறிவியல் தான் ஜோதிடம்;இது தொடர்பாக ஏராளமான ஆதாரங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன;

கைரேகை நிபுணர் சீரோ இந்தக் கலையை நமது நாட்டின் ஆன்மீக மையமான காசிக்கு வந்து கற்றுக் கொண்டு சென்றார்;

நூற்றாண்டுகள் என்ற நூலை ப்ரான்ஸ் நாட்டு தீர்க்கதரிசி நார்ஸ்டர்டாமஸ் கி.பி.1400 களில் எழுதினார்;அதில் கி.பி.3500 வரை இந்த பூமியில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை துல்லியமாக கணித்திருக்கின்றார் என்று வாய்பிளக்கின்றோம்;

அவர் ஜோதிடம் கற்றுக்கொள்வதற்காக 1400 களில் காசிக்கு வருகை தந்தார்;வருகை தந்து 3 ஆண்டுகள் கற்றுக் கொண்டார் என்பது மறைக்கப்பட்ட உண்மை;ஏன் மறைக்கப்பட்டது? இந்த உண்மைகள் தமிழ்நாட்டின் தினசரிகளில் வெளிவந்தால் இந்துக்களாகிய நமக்கு ஜோதிட நம்பிக்கை வந்துவிடும்;ஜோதிட நம்பிக்கை வந்துவிட்டால் இந்து மதம் வலுவடைந்துவிடும்;இந்து மதம் வலுவடைந்துவிட்டால், மதமாற்றம் செய்ய முடியாது;

1960 களில் நமது நாட்டைச் சேர்ந்த ஒருவர் 150 விமானங்கள் வாங்கிட முடிவு செய்தார்;அதற்காக உலகம் முழுவதும் இருக்கும் விமான தயாரிப்பு நிறுவனங்களின் விலைப்பட்டியலை பெற்றார்;ப்ரான்ஸ் நாட்டின் விமானங்களை வாங்கிட முடிவு செய்திருந்தார்;அப்போது,ஜெர்மனி நிறுவனம் தனது விளக்கப் புத்தகத்தில் ‘நாங்கள் எங்கள் தயாரிப்புகளை மூலம் நட்சத்திரம் இருக்கும் நாளில் தயார் செய்ய ஆரம்பிப்பது வழக்கம்’ என்று குறிப்பிட்டிருந்தது;உடனே,தனது முடிவினை மாற்றி ஜெர்மனி விமான நிறுவனத்திடம் இருந்து விமானங்களை வாங்கினார்;

முதன் முதலாக நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் முன்பு,அமெரிக்க விண்வெளி அமைப்பு மூன்று பேர்கள் கொண்ட மூன்று குழுக்களை தயார் செய்தது;அவர்களின் பிறந்த குறிப்புகளை பாரத நாட்டுக்கு கொண்டு வந்து இங்கே ஜோதிட ஆலோசனை செய்த பிறகு,ஜோதிடர்களின் முடிவுப்படியே நிலாவுக்கு மனிதர்களை அனுப்பியது;செவ்வாயும் கேதுவும் இணைந்து அதை சுக்கிரன் பார்த்தால் அல்லது சேர்ந்திருந்தால் அவர்களுக்கு நூதனமான விண்வெளிப்பயணம் கைகூடும்;செவ்வாய் ஆட்சியாகி,கேது உச்சமாகி அந்த இடம் லக்னத்திற்கு ஒன்பதாம் இடமாக அமைய வேண்டும் என்பதுதான்  ஜோதிடவிதி ஆகும்;


120 ஆண்டுகளுக்கு ஒருமுறை செவ்வாய்யும் குருவும் ஒரு குறிப்பிட்ட உபயராசியில் குறிப்பிட்ட டிகிரியில் சேரும் போது பாதாள நகரம் கட்ட ஆரம்பிக்க வேண்டும்;அந்த நகரம் எப்பேர்ப்பட்ட பூகம்பத்தையும் தாங்கிக் கொண்டு பாதுகாப்பாக இருக்கும்;இவைகள் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்ட ஓலைச்சுவடிகளில் இருப்பவை ஆகும்;

ஸ்டீவ் ஜாப் தனது வாழ்நாளில் 4 ஆண்டுகள் சைவத்தின் தலைநகரமும்,பிரபஞ்சத்தின் ஆன்மீக மையமும் ஆன திரு அண்ணாமலையில் வாழ்ந்தார்;தனது ஆயுளில் 1000 முறைக்கும் மேல் கிரிவலம் வந்தார்;அதன் பிறகே உலகம் புகழும் உன்னதமான நிறுவனத்தை துவக்கிட முடிந்தது;


நார்வே,ஸ்வீடன் போன்ற நாடுகளில் பல நிறுவனங்கள் துவங்கப் பட்டு 1000 ஆண்டுகள் ஆகின்றன;அது எப்படி ஒரு நிறுவனம் 100 ஆண்டுகளையும் கடந்து 1000 ஆண்டுகள் வரை இயங்குகின்றது;ஒரு குறிப்பிட்ட நட்சத்திரமும்,குறிப்பிட்ட திதியும் சேர்ந்து வரும் நாளில் துவக்கப்படும் அமைப்பு அல்லது நிறுவனம் காலம் கடந்து நிற்கும்;அப்படிப்பட்ட நாளும் திதியும் ஒருவருடத்தில்  ஒரு முறை அல்லது இருமுறை மட்டும் வரும்;17.9.2018 திங்கள் இரவு  9 மணியில் இருந்து 18.9.2018 செவ்வாய் காலை 11.04 வரை அப்படிப்பட்ட அமைப்பு வர இருக்கின்றது;

18.9.2018 செவ்வாய்க்கிழமை காலை 5 முதல் 6 மணிக்குள் ஒரு நிறுவனத்தின் பெயரை ஒரு சிலேட்டில் எழுதி அதன் அருகில் விநாயகர்சிலை  அல்லது படம் வைத்து,ஒரு குத்துவிளக்கு ஏற்றினால் நிறுவனம் துவக்கியதாக அர்த்தம்;



ஜோதிடத்தை இப்பிறவியில் இகழ்ந்து பேசினால்,பேசியவர் அடுத்த பிறவியில் மனிதப் பிறவி எடுத்தாலும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்க முடியாது;அதனால் தான்,நாத்திகத்தை ஆன்மீக தமிழகத்தில் விதைத்தார்கள் இந்த மேல்நாட்டு கிறிஸ்தவர்கள்:அதன் பிறகு ஆன்மீகத்தின்.இந்து தர்மத்தின் அடித்தளமான ஜோதிடத்தை இகழ்ந்தார்கள்;

No comments:

Post a Comment