Tuesday, March 20, 2018

சத்குருவின் வாழ்வியல் உபதேசம்=பகுதி 4



பணத்தட்டுப்பாட்டைத் தீர்த்திட: 

இரட்டை விநாயகர் இருக்கும் சன்னதிகளில் சதுர்த்தி அல்லது சதுர்த்தசி அல்லது இரு திதிகளிலும் முழு தாமரை மலர்  மாலையை அணிவிக்க வேண்டும்;விநாயகர் அகவல் ஒருமுறையாவது ஜபிக்க வேண்டும்;கொளுக்கட்டைகளை படையலாக இட வேண்டும்;நமது பெயர்,நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து வர வேண்டும்;முடிவாக,தாமரை மலர்களையும்(அந்த சாத்திய மலர்களைஅல்ல;)கொளுக்கட்டைகளையும் ஏழைச் சிறுவர்கள்,சிறுமிகளுக்கு தானமாகத் தர வேண்டும்; 

மாதம் ஒருமுறை வீதம் அதிக பட்சமாக 36 முறை செய்து வர பணத்தட்டுப்பாடு நீங்கும்;இரட்டைப்பிள்ளையார் அவதாரம்,திருமாலின் மகள்களை திருமணம் செய்த பின்னரே உண்டானது;எனவே தான்,இரட்டைப்பிள்ளையார் வழிபாடு மஹாலட்சுமி கடாட்சத்தை அள்ளித் தருகின்றது;

$       $       $       $       $      $      $


வீட்டில் அரிசி வைக்கும் பானையில் ஒரு தாமரை மலரை வைக்க வேண்டும்;மறு நாள் அதை ஒரு பசு அல்லது யானைக்கு தர வேண்டும்;இதை தினமும் ஒருமுறை என்று 48 நாட்கள் செய்யலாம்;


பசுவின் வால்புறத்தின் இரு பாகத்தில் நமது முதல் சம்பளம் மற்றும் கட்ட வேண்டிய கல்வி கட்டணம்,தேர்வுக் கட்டணத்தை சில நொடிகள் வைத்துவிட்டு அதை பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும்;,மிகுந்த அனுஷ்டானங்கள் தெரிந்தவர்கள் படு ரகசியமாக செய்து வரும் “செல்வ வளத்தை அதிகரிக்கும்” முறைகளில் இது முதன்மையானது;



வீட்டின் நிலைப்படி,சமையலறையின் நிலைப்படி,படுக்கையறையின் நிலைப்படியை மட்டும் மாம்பலகையால் அமைக்க வேண்டும்;அல்லது பலா,தேக்கு நிலைப்படிகளும் அமைக்கலாம்;செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தாமே அரைத்த மஞ்சளையும்,தாமே அரைத்த சந்தனத்தையும் பூச வேண்டும்;பிறகு,பழுத்த சுமங்கலியைக் கொண்டு அதில் குங்குமம் வைக்க வேண்டும்;இதன் மூலமாக பண தேவதைகள் மகிழ்ச்சி அடைந்து செல்வத்தின் தலைவியான மஹாலக்ஷ்மியை அழைத்து வருவது உண்டு;


தினமும் அல்லது வாரம் இரு நாட்களில் வாசலில் மாவு கோலம் போடுவதன் மூலமாகவும் மஹாலஷ்மி கடாட்சத்தைப் பெறலாம்;

ஓம் சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகளின் திருவடிகளே சரணம்! சரணம்!! சரணம்!!!


No comments:

Post a Comment