Saturday, February 3, 2018

மஹாவராகியின் அருளைத் தரும் மந்திரம்


உலக வரலாற்றில் ஒரு நாட்டின் காவல் தெய்வம் என்று இருப்பது நமது பாரத நாட்டுக்கு மட்டுமே!

மிகவும் பழமையான இலக்கியங்களில் மாநிலத்தின் காவல் தெய்வம் மஹாவராகி என்று குறிப்பிடப்பட்டுள்ளது;அன்றைய கால கட்டத்தில்,சுமாராக 1200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழி பாரத நாடு முழுவதும் பேசப்படும் மொழியாக இருந்தது;இன்றைய பத்ரிநாத்,கேதார்நாத்,அமர்நாத் போன்ற ஆலயங்களில் இருக்கும் கல்வெட்டுக்களும் இதையே தெரிவிக்கின்றன;

இன்னொரு கருத்தும் இருக்கின்றது;தமிழ்நாட்டின் காவல் தெய்வம் மஹாவராகி;கிழக்கு பாரதத்தின் காவல் தெய்வம் தட்சிணேஸ்வரம் காளி;மேற்கு பாரதத்தின் காவல் தெய்வம் பவானி;வடக்கு பாரதத்தின் காவல் தெய்வம் வைஷ்ணவி;இந்த  தெய்வ வழிபாடுகள் மங்கிப் போனதால் தான் இன்று இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் அவதியோடு வாழ்ந்து வருகின்றார்கள்;


ராஜராஜசோழன் காலத்தில் அவரது சோழப் பேரரசு இன்றைய ஆசியக் கண்டம்,ஆஸ்திரேலியக் கண்டம் முழுவதும் பரவி இருந்தது;இது அலக்ஸாண்டரின் ஆட்சிப்பிரதேசத்தை விடவும் சுமார் 100 மடங்கு பெரியது ஆகும்;

ராஜராஜசோழனின் இப்படிப்பட்ட பேரரசு உருவாகிடக் காரணம் ப்ருஹத் வராகியை தொடர்ந்து வழிபட்டதால் தான்;கருவூர் சித்தரும்,போகரும் ப்ருஹத் வராகி வழிபாட்டினை சோழர்களுக்கு போதித்தார்கள்;அதனால் தான் உலகில் வேறு எங்குமே இல்லாத அளவுக்கு 1,00,000 நெல் ரகங்களை சோழ நாட்டில் பயிரிட்டார்கள்;கி.பி.1875 வரை இதை 16,000 நெல் ரகங்களாக சுருங்கியது;தற்போது சில ஆயிரம் நெல் ரகங்களை சிறு தானியங்களாக நாம் அறுவடை செய்து வருகின்றோம்;

மூன்றுவிதமான வராகி அன்னைகள் இருக்கின்றார்கள்;
1.ராஜராஜேஸ்வரியின் படைத்தளபதியாக
2.சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான சதாசிவனின் துணைவி சக்தியாக
3.புதன் கிரகத்தின் (ஜோதிடப்படி) ப்ராண தேவதையான உன்மத்த பைரவரின் துணை சக்தியாக உன்மத்த வராகி;
தவிர,64 வித வராகி அவதாரங்களும் இருக்கின்றார்கள்:

மகத்தான பெரும் பூர்வபுண்ணியம் உள்ளவர்களால் மட்டுமே இந்த கொடூரங்கள் நிறைந்த கலியுகத்தில் தினமும் அன்னை மஹாவராகியை ஜபிக்க முடியும்;

அசைவம்,மது இரண்டையும் நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு,தினமும் ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் பின்வரும் மந்திரத்தை 90 நிமிடங்களுக்குக் குறையாமல் ஜபித்து/எழுதி வர அன்னை மஹாவராகியின் அருள் 1008 வது நாளுக்குள் கிட்டிவிடும்;

ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ

ராகு மஹாதிசை நடப்பில் இருப்பவர்களுக்கும்

தான் உண்டு,தனது வேலை உண்டு என்று வாழ விரும்புபவர்களுக்கும்

அன்னை மஹாவராகியை முழு முதல் தெய்வமாக எண்ணுபவர்களுக்கும்

முற்பிறவிகளில் சாக்த வழிபாடு செய்து வருபவர்களுக்கும்

அம்பாள் உபாசனை செய்ய விரும்புபவர்களுக்கும் 

இம்மந்திரம் அரிய வரப்பிரசாதம் ஆகும்;


No comments:

Post a Comment