Friday, September 8, 2017

அன்னை மஹாவராகி ஜபத்தின் பலன்கள்!!!



உலகத்தில் இருக்கும் பழமையான வழிபாட்டுமுறை சைவ வழிபாடு;அதைவிடவும் மிகவும் பழமையான ஸ்ரீவித்யா உபாசனை ஆகும்;

இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதை நீங்கள் உணர்வீர்களா?


நாம் வாழ்ந்து வரும் பூமியானது சூரியனைச் சுற்றிவருகின்றது;சூரியன் இருப்பது மில்கி வே என்ற பால்வழித்திரள் என்ற காலக்ஸியில்! இந்த பால்வழித் திரளின் விட்டம் 1,00,000 ஓளியாண்டுகள்;


அதென்ன்ன ஒளியாண்டு?

ஒளியின் வேகம் விநாடிக்கு 3,00,000 கி.மீட்டர்கள்;
இப்படி ஒரு வருடத்தில் ஒளியானது கடக்கும் தூரம் 9,00,000 கோடி கி.மீட்டர்கள் ஆகும்;


இப்படி ஒரு லட்சம் ஆண்டுகள் பயணித்தால்,பால்வழித்திரளின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்குச் சென்றுவிடலாம்;


ஒரு ராக்கெட்டில் விநாடிக்கு 3,00,000 கி.மீ.வேகத்தில் பயணித்தால்,நாம் வாழ்ந்து வரும் மில்கிவே காலக்ஸியின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு பயணிக்க ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும்;


இது போல,பல கோடி காலக்ஸிகள் இருக்கின்றன;இந்த காலக்ஸிகள் (தமிழில் அண்டம் என்றும் சொல்லலாம்) அனைத்தும் சேர்ந்தே பிரபஞ்சமாக இருக்கின்றது;இந்த பிரபஞ்சத்தை விடவும் மிகப் பெரியது ஸ்ரீசக்கரம் ஆகும்;


இந்த ஸ்ரீசக்கரத்தில் 43 கோடி தெய்வீக பெண் சக்திகள் ஆட்சி புரிகின்றன;இந்த 43 கோடி பெண் தெய்வீக சக்திகளுக்கும் தலைமை தான் ஸ்ரீராஜாராஜேஸ்வரி என்ற திரிபுரிசுந்தரி என்ற வாலை என்ற மனோன்மணி!


இந்த ஸ்ரீராஜராஜேஸ்வரியை சித்தர்களால் மட்டுமே வழிபட முடியும்;இந்த அன்னையை வழிபட முறையான வழிமுறைகளும் இருக்கின்றன;அதற்குப் பெயர்தான் ஸ்ரீவித்யா உபாசனை!


முதலில் அஷ்டகணபதியின் அருளைப் பெற வேண்டும்;இதை யார் வேண்டுமானாலும் பெறலாம்;அதிக பட்சமாக 3 ஆண்டுகள் முயற்சி செய்தால் அஷ்டகணபதியின் அருள் கிட்டிவிடும்;


அதன் பிறகு,ராஜாமாதங்கியின் அருளைப் பெற வேண்டும்;இந்த அன்னையின் அருளைப் பெற குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் ஆகும்;அதிக பட்சம் 6 ஆண்டுகள் வரை ஆகலாம்;


அதன் பிறகு,மஹாவராகியின் அருளைப் பெற வேண்டும்;இந்த அன்னையின் அருளைப் பெற குறைந்த பட்சம் 3 ஆண்டுகளும்,அதிக பட்சம் 12 பிறவிகளும் ஆகும்;

நிறைவாக,அன்னை மனோன்மணியின் அருளைப் பெற முயற்சிக்க வேண்டும்;இதற்கு எத்தனை பிறவிகள் ஆகும் என்பதை எவராலும் கூற இயலாது;


ஸ்ரீராஜராஜேஸ்வரியின் படைகளுக்குரிய தலைமைத் தளபதியாகத் திகழுபவளே அன்னை மஹாவராகி ஆவாள்;


முந்தைய யுகங்களான கிருதயுகம்,திரோதாயுகம்,துவாபரயுகம் என்று மூன்று யுகங்களில் அன்னை மஹாவராகியை உபாசனை செய்தவர்கள் ஏராளமானவர்கள் இப்போது பிறவி எடுத்து வாழ்ந்துவருகின்றார்கள்;அவர்களுக்காகவே அன்னை மஹாவராகியின் வழிபாட்டை பரப்புகின்றோம்;


மற்ற யுகங்களில் ப்ரம்மச்சாரிய விரதம் ஒரு பிறவி முழுவதும் இருந்து அன்னை மஹாவராகியை உபாசனை செய்து கொண்டே இருக்க வேண்டும்;கரணம் தப்பினால் மரணம்  என்பது முந்தைய யுகங்களில்!


ஆனால்,இப்போதைய கலியுகத்தில் அப்படி இல்லை;இல்லறத்தில் இருந்தவாறே அன்னை மஹாவராகியின் 12 பெயர்களை தினமும் ஜபித்துக் கொண்டே இருந்தால் போதுமானது;அன்னை மஹாவராகியின் கருணையும்,அருளும் கிட்டிவிடும்;அப்படி பலருக்கு கிட்டி இருக்கின்றது;


ஓம் ரீங் வாத்தியார் ஐயா
வாத்தியார் ஐயா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இவைகள் தான் அன்னை மஹாவராகியின் அருளைப் பெற்றுத்தரும் 12 பெயர்கள்;ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் ஒரு வருடத்திற்கும் மேலாக ஜபித்து வந்தமையால் கிட்டிய அருள் நன்மைகளை அன்னை மஹாவராகியின் ஆசிகளோடு இங்கே உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்;


இந்த 12 பெயர்களையும் தினமும் இரவில் மட்டுமே ஜபிக்க வேண்டும்;அதிகாலையிலும் ஜபிக்கலாம்;அசைவம்,மது கண்டிப்பாக தவிர்த்தால் மட்டுமே ஜபத்திற்கான பலன் கிட்டும்;

22 வயதில் அவருக்கு திருமணம் ஆனது;அவர் அரசாங்கத்தில் பணிபுரிகின்றார் என்பதாலேயே அவருக்கு பெண் கொடுக்க பலர் முன்வந்தார்கள்;இப்போது அவருக்கு வயது 51 ஆகின்றது;இவருக்கு  இரண்டு  சகோதரிகள்;மூவருக்கும் இவருக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது;இவர் வாங்கும் சம்பளத்தை இவர் வீட்டில் தந்ததே கிடையாது;இவரது மனைவி தமது பெற்றோர்கள் தந்த பணத்தில் தான் இத்தனை ஆண்டுகளாக வாழ்க்கையை நடத்தியிருக்கின்றார்;காரணம்,இவரை இவரது இரு சகோதரிகளும் வசியம் செய்து வைத்துள்ளார்கள்;இவரது சம்பளம்,மேல் வருமானம் அனைத்தையும் “பங்கு” போட்டுள்ளார்கள்;

கடந்த ஒரு வருடமாக இவரது மனைவி அருகில் இருக்கும் பழமையான ஆலயத்தில் இரவு 7 முதல் 8 மணி வரை மேலே கூறப்பட்டிருக்கும் 12 பெயர்களை தொடர்ந்து ஜபித்து வந்திருக்கின்றார்;அது பழமையான ஆலயமாக இருந்ததால்,இவர் ஜபிக்க ஆரம்பித்த 6 வது மாதத்தில் இருந்து,இவர் கணவருக்கு அவரது சகோதரிகள் எப்படி வசியம் செய்து வைத்தார்கள்? அதை இத்தனை ஆண்டுகளாக எப்படி மெயின்டெய்ன் செய்தார்கள்? என்ற உண்மை தெரியவந்தது;
விடாப்பிடியாக இவரது மனைவி அன்னை மஹாவராகியின் 12 பெயர்களை ஜபித்து வந்தமையால் இவர் சகோதரிகளின் வசியம் செயலிழந்துவிட்டது;
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


அந்த பள்ளி மாணவிக்கு வயது 14;பள்ளிக்குச் சென்றால் போராட்டம்;வீட்டு வந்தால் போராட்டம்;தோழிகளோடு பழகினால் போராட்டம்;தினமும் அதிகாலையில் 30 நிமிடம் மற்றும் இரவில் 30 நிமிடம் என்று ஜபித்து வந்தமையால் ஒராண்டுக்குப் பிறகு,வீட்டில் நிம்மதி;பள்ளித் தோழிகளால் நிம்மதி;படிப்பில் முழுக்கவனம் செலுத்துமளவுக்கு நிம்மதி;இவரது அப்பாவுக்கு குடிப்பழக்கம் அடியோடு நின்றுவிட்டது;அதுதான் இந்த குடும்பத்திற்கு ஆச்சரியம்;
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


அவருக்கு அவரது குலதெய்வம் கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் குலதெய்வம் இவருக்குள் புகுந்து அங்கே வந்திருப்பவர்களுக்கு அருள் வாக்கு சொல்லும்;

இவருக்கு திருமணம் ஆனதில் இருந்து இன்று வரையிலும் இப்படி இருந்துள்ளது;கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு,இவரது பங்காளிகளே இவருக்குள் குலதெய்வம் வந்தாலும் பேசவிடாமல் தடுத்துள்ளார்கள்;

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்னை மஹாவராகியின் 12 பெயர்களை ஜபிக்க ஆரம்பித்துள்ளார்;ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் 14 மாதங்கள் தினமும் ஜபித்து வந்தமையால் மீண்டும் குலதெய்வம் பேச ஆரம்பித்துள்ளது;பேச ஆரம்பித்ததுமே,யார் கட்டியது? எதற்காக கட்டினார்கள்? என்ற விபரங்களைத் தான் தெரிவித்திருக்கின்றது;

தன்னிடம் மட்டும் குலதெய்வம் பேசுவதில்லை;இவரிடம் பேசுவதால் இவருக்குத்தான் புகழ் இருக்கின்றது என்ற பொறாமையே காரணம்;
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


இது போல நூற்றுக்கணக்கான ஆச்சரியங்களை அன்னை மஹாவராகியின் அருளால் நிகழ்ந்துள்ளது;அன்னை மஹாவராகியின் அனுமதித்துள்ள சம்பவங்களை மட்டுமே இங்கே தெரிவித்திருக்கின்றோம்;


No comments:

Post a Comment