Monday, December 22, 2014

ஜீவ சமாதியும் ஆலய வழிபாடும்



ஆதிசிவன் என்று அழைக்கப்படும் அண்ணாமலையைத் தவிர,இந்த பூமியில் மனிதர்களாகிய நாம் வழிபடும் அனைத்து தெய்வங்களுமே ஆவிநிலையில் இருப்பவையே! சராசரி மக்களிடம் இதைச் சொன்னால் தவறாகப் புரிந்து கொள்ளவே வாய்ப்புக்கள் அதிகம்;

பூமியில் இதுவரை இருக்கும் மதங்களிலும்,இனிமேல் உருவாகப் போகும் மதங்களிலும் இருக்கப் போவது ஒரே ஒரு கருத்துதான்:- இறைவன் ஒருவனே!

அந்த ஒரு இறைவனை மனிதர்கள் வெவ்வேறு பெயர்கள் சொல்லி அழைக்கிறார்கள்;
மனித நிலையில் இருந்து இறைநிலையை அடைய முயலும் போது ஏராளமான ஆன்மீக முன்னேற்றங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது;அப்படி முன்னேறும் போது உருவாகும் ஒரு நிரந்தர நிலையே சித்தர்கள் நிலை;

ஒரு சித்தர்  பிறவி முழுவதும் எந்த தெய்வத்தை வழிபட்டாரோ,அந்த தெய்வம் இருக்கும் இடமே நாம் வாழும் கலியுகத்தில் பிரபல கோவிலாக வளர்ந்திருக்கிறது;

உதாரணமாக போகர் தனது வாழ்நாள் முழுவதும் முருகக் கடவுளை வழிபட்டார்;அதனால் அவர் வழிபட்ட முருகக்கடவுள் பழம் நீ என்ற பெயரில் பிரபலமான ஆலயமாக ஆகியிருக்கிறது.இன்றும் பழனிமலைக்கு அடியில் ஒரு குகையில் போகர் சித்தர் தவம் செய்வதாகவும்,கலியுகம் முடியும் போது அவர் வெளியே வருவார் என்றும் சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்;

படத்தில் நீங்கள் பார்ப்பது குதம்பைச்சித்தரின் ஜீவசமாதி ஆகும்;இவர் ஒரு பிறவி முழுவதும் வினாயகரை வழிபட்டு வந்துள்ளார்;


இன்னும் நிறைய பார்ப்போம். . .

No comments:

Post a Comment