Saturday, May 4, 2013

மீண்டும் நிம்மதியிழக்கும் பூமி!!!








10.4.2013 முதல் 21.5.2013 வரையிலும்,19.8.2013 முதல் 8.10.2013 வரையிலும் செவ்வாயும்,சனியும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு பூமி மற்ரும் இந்தியாவின் பிறந்த ராசியான கடகராசியைப் பார்க்கப் போகின்றன;நம் அனைவரின் மனதுக்கும் அதிபதியான சந்திரனின் ராசியும் கடகமே என்பதை இந்த கணத்தில் நினைவில் கொள்வது நல்லது;எனவே, 16.12.2014 வரை தினமும் ஏதாவது ஒரு வழிபாடு செய்யாவிடில்,நாம் நமது மனது,நமது ஆத்மா மூன்றுமே தடுமாறி நமது வாழ்க்கையில் இந்த நாட்களில் எதிர்பாராத குழப்பங்கள்,சண்டைச் சச்சரவுகள் ஏற்பட இருக்கிறது;இதனால்,கடகராசி,தனுசுராசி மட்டுமல்ல;அனைத்து ராசியினரும் பாதிப்புக்குள்ளாக இருக்கிறார்கள்.




அடுத்து வர இருக்கும் இந்த யுத்தக் கிரகங்களின்பார்வையால் நமது பூமியானது சிலபல மாற்றங்களை சந்திக்க இருக்கிறது;கடல் பரப்பு அதிகரித்து,நிலப்பரப்பு சுருங்கப் போகிறது.இதை தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக இதன் கோரத்தை குறைக்க நாம் ஒவ்வொருவரும் பின்வரும் ஏதாவது ஒன்றை தினமும் பின்பற்றுவோம்;நம்மை நவக்கிரகங்களின் பாதிப்பிலிருந்தும் உலக அழிவிருந்தும் பாதுகாப்போம்;

தினமும் ஒருமணிநேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபித்தல்;


தினமும் ஏதாவது ஒரு ஜீவசமாதிக்குச் சென்று வழிபாடு செய்தல் அல்லது ஓம்சிவசிவஓம் ஜபித்தல்;

தினமும் 131 சித்தர்கள் மந்திரங்கள் ஜபித்தல்;

இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் விடாமல் தினமும் பின்பற்றிவந்தால்,சிக்கல்கள் நிறைந்த நமது காலத்தில் நமது தினசரி வாழ்க்கை எந்த ஒருகுறையுமின்றி சீராகும்;

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment