Wednesday, April 29, 2009

இந்து ஜோதிடம்-சில மறைக்கப்பட்ட நிஜங்கள்


சில ஜோதிட உண்மைகள்

ஜோதிடம் ஒரு துல்லியமான அறிவியல் என ஐரோப்பிய-அமெரிக்க நாட்டு மெடாபிசிக்ஸ் விஞ்ஞானிகள் ஏராளமான ஆய்வுகள் மூலமாக நிரூபித்துவிட்டனர்.

இதனால், அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இந்து ஜோதிடத்தை வேத ஜோதிடம் என்ற பெயரில் பட்டப்படிப்பு வைத்துள்ளனர்.
ஜோதிடத்தை பின்பற்றுவோர்,ஜோதிடத்தைத் தொழிலாக பார்ப்போர் அனைவரும் அமெரிக்க வேத ஜோதிட சங்கம் என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டுவருகின்றனர்.
http://www.aava.org/ என்பது இவர்களின் இணைய தளமாகும்.இதே போல இங்கிலாந்தில் http://www.bava.org/ என்ற பெயரில் இயங்கி வருகின்றனர்.

நமது பாரதநாட்டிற்கு சுதந்திரம் தருவதற்கு முன், மவுண்ட்பேட்டன் நாட்டின் பிரபல ஜோதிடர்களை அழைத்தான்.ஒரு குழந்தை பிறந்து 50 வருடங்கள் வரை போராட்டமாகவே வாழவேண்டும் எனில் அந்த குழந்தை எந்த நேரங்களில் பிறக்கும்? என கேட்டான்.அவர்கள் குறிப்பிட்டுத்தந்த நேரங்களில் மிகவும் மோசமான நேரம் 14.8.1947 நள்ளிரவு 11.45 ஆகும்.அந்த நேரத்தில் தான் அவன் நமது நாட்டிற்கு சுதந்திரம் தந்தான்.
(யோசியுங்கள்.ஜோதிடத்தை பொய் எனக்கூறும் மதம் கிறிஸ்தவம்.இங்கிலாந்து ஒரு கிறிஸ்தவ நாடு.நமது நாடு ஜோதிடத்தைக் கண்டுபிடித்த நாடு.நமது மரபுச்செல்வத்தைக் கொண்டே நமது கண்ணைக் குத்திவிட்டான் கிறிஸ்தவன்).

இன்று வரையிலும் அமெரிக்கா தனது சி.ஐ.ஏ.,உளவாளிகளை நமது ஜோதிடத்தின் மூலமாகவே தேர்வு செய்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

நிலாவிற்கு ஆர்ம்ஸ்ட்ராங்,ஆல்ட்ரின் குழுவைத் தேர்ந்தெடுத்தது அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா.இவர்களைத் தவிர மேலும் 3 குழுக்களுக்கு பயிற்சியளித்து தயாராக வைத்திருந்தது.ஒரு குழுவில் 3 பேர்வீதம் மொத்தம் 9 பேர் தயாராக இருந்தனர்.இந்த 9 பேரின் பிறந்த நேரம்,பிறந்த தேதி, பிறந்த நகரம்-இவற்றுடன் நாசா நிர்வாகிகள் கேரளாவிற்கு நேரில் வந்து பிரபலமான ஜோதிடர்களிடம் ஜோதிட ஆலோசனை கேட்டறிந்தனர்.அந்த நம்பூதிரி ஜோதிடர்களின் வழிகாட்டுதலின் படி ஆர்ம்ஸ்ட்ராங் குழுவை நிலாவிற்கு அனுப்பினர்.
ஒருவர்- மனித உடலோடு விண்வெளிப்பயணம் சென்று திரும்ப வேண்டுமானால் அவரது பிறந்த ஜாதகத்தில் கேது உச்சமாகவும், உடன் செவ்வாய் ஆட்சியாகவும் இருக்க வேண்டும்.

உலக வரலாற்றில் ஜோதிடத்துறைக்கு என கேபினட் மந்திரி பதவியை உருவாக்கியவர் முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் ஆவார்.அவர் தனது ஆஸ்தான ஜோதிடரை தனது மந்திரி சபையில் 2 ஆண்டுகள் வரை மந்திரியாக நியமித்திருந்தார்.
உலக வரலாற்றில் கட்சிஆரம்பித்த வெறும் 9 மாதங்களில் ஆட்சியைப்பிடித்ததும் என்.டி.ராமாராவ் அவர்கள் மட்டுமே!
அதற்கு முழு முதற்காரணங்களில் ஒன்று கட்சியை ஆரம்பித்த நேரமே!


No comments:

Post a Comment