Tuesday, March 24, 2009

சிறந்த தம்பதியாக வாழவும்,சிறந்த வாழ்க்கைத்துணையைத்தேர்ந்தெடுக்க...


கணவன் மனைவிக்கு சில உருப்படியான யோசனைகள்

கணவன் மனைவி உறவு காம சுகத்திலிருந்தே ஆரம்பமாகிறது.இதில் கணவன் மனைவியை படுக்கையில் திருப்திபடுத்தவேண்டும். மனைவிக்கு திருப்தி கிடைக்க படுக்கையில் கணவனது ஆசைகளை மனைவி நிறைவேற்ற வேண்டும்.அதாவது,படுக்கையில் மனைவியானவள் கணவனுக்கு அடிமையாக(தாசியாக) நடந்து கொள்ளவேண்டும்.
பெண் என்பவள் காம சொரூபம்.ஆண் என்பவன் ஒரு பெண்ணை காமத்தில் திருப்திபடுத்தவே படைக்கப்பட்டிருக்கிறான்.அதன் பிறகே,அவனது சம்பாத்தியம்,கவுரவம்,திறமை எல்லாமே!

ஆனால் இன்று திருமணம் ஆணின் சம்பளம் மற்றும் பெண்ணின் வரதட்சணை இவற்றைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்,ஆணின் திருமண வயதைவிட பெண்ணின் திருமணவயது குறைந்தது 3 வருடங்கள் குறைவாக இருப்பது மிக நல்லது.அதிக பட்சம் 8 வருடங்கள் குறைவாக இருக்கலாம்.அதைவிட அதிகமாக இருப்பது விரும்பத்தக்கது அல்ல.10 வருடம்,12 வருடம்,14 வருடம் வித்தியாசம் இருந்தால் அந்த மனைவியின் ஒழுக்கத்திற்கு காரண்டி தரமுடியாது.

தன்னைவிட மூத்த பெண்ணை ஒருவன் உறவு கொண்டால் அவனது முகத்தில் கிழத்தன்மை வந்துவிடும்.அதே சமயம் அந்த மூத்த பெண்ணிற்கு இளமைத்தன்மை வந்துவிடும்.ஏன் இப்படி வருகிறது?
ஒவ்வொரு ஆணின் பிறப்புறுப்பு வழியாக சுக்கிலம் என்ற நிறமற்ற திரவம் வெளிவருகிறது.ஒவ்வொரு பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக சுரோணிதம் என்ற நிறமற்ற திரவம் வெளிவருகிறது.இந்த திரவங்கள் அவரவரது உடல்வாகு, வயது,வலிமையைப் பொருத்து மாறுபடுகிறது.ஒரு ஆணின் சுக்கிலம் நீண்டகாலமாக ஒரே பெண்ணின் உடலுக்குள்ளும்,ஒரு பெண்ணின் சுரோணிதம் ஒரே ஆணின் உடலுக்குள்ளும் பாய்ந்தால் இருவரின் உடலும் முழு ஆரோக்கியமாக இருக்கும்.
பலருடன் உடலுறவு கொள்ளும்போது உடல் சமநிலை பாதிக்கப்படும்.இதைத்தான் நமது தமிழ் முன்னோர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையாக தமிழ்மரபாக வகுத்தனர்.மிகுந்த காம இச்சை உள்ளவர்கள்-ஆணோ,பெண்ணோ-துணைவி/துணைவன் கூடுதலாக வைத்துக்கொள்ளலாம்.ஆனால் அதுதான் எல்லை.
இந்த எல்லையை மீறும்போது ஒரு குடும்பம் சிதைகிறது.
இப்படி பல குடும்பங்கள் சிதைந்தால்,ஒரு ஜாதியே நாசமடைகிறது.பல ஜாதிகள் நாசமடைந்தால்,நாடு சிதைந்து சின்னாபின்னமாகிவிடும்.
எனவே,ஒருவனுக்கு ஒருத்தியாக வாழுங்கள்.

திருமணமான தம்பதிகள் ஒவ்வொரு முறையும் உறவு கொள்ளும்போதும் வித்தியாசமாக உறவு கொண்டால் கிக் அதிகமாகும்.இல்லாவிட்டால்,வாழ்க்கைத்துணை மீது காம மயக்கம் வராது.
கணவன் மனைவியையும்,மனைவி கணவனையும் எப்படி மயக்குவது என்பதை 60 டெக்னிக்குகளாக விவரிக்கும் புத்தகம் ஒன்று தமிழில் வெளிவந்துள்ளது.அந்த புத்தகத்தை ஒவ்வொரு திருமணத்தம்பதியும் அவசியம் படிக்கவேண்டும்.ஏன் எனில் இன்று காமம்-மனைவியைப்பற்றி- அவளை/அவனை எப்படி வளைத்துப் போடுவது என்பது பற்றி சொல்லித்தர ஆளில்லை.அப்படியே இருந்தாலும் சொல்லித்தருபவர்கள் அவமானம் அடைகிறார்கள்.
அந்த புத்தகத்தை விகடன் பிரசுரம் ரூ.100க்கு வெளியிட்டுள்ளது.அந்த புத்தகத்தின் பெயர்:ரொமான்ஸ் ரகசியங்கள்.
இதில் விளக்கப்பட்டுள்ள 60 டெக்னிக்குகளில் 20 மட்டும் பின்பற்றினாலே கணவன் மீது மனைவிக்கும் மனைவி மீது கணவனுக்கும் காமவெறியே உண்டாகும்.முடிவாக சிறந்த தம்பதியாக வாழ்வார்கள்.இது அனுபவ உண்மை.
இதே புத்தகம் 60 வயதைக்கடந்த தம்பதிக்கும் பல அரிய யோசனைகளைக்கூறுகிறது.
தம்பதிகளுக்கு திருமணமான 7ஆம் வருடம் செவன் இயர் இட்ச் என்ற ஒன்று உருவாகிறது என மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சிகள் மூலமாக கண்டறிந்துள்ளனர்.7ஆம் வருடம் தனது இல்லற வாழ்வில் ஒருவித சோர்வு உண்டாகிறது.சிலருக்கு இது 7ஆம் வருடம் உண்டாகாமல் 9 அல்லது 10 அல்லது 12 ஆம் வருடம் உண்டாகிறது.இந்த சமயத்தில்தான், மூன்றாம் ஆள் உள்ளே நுழைந்து கள்ளக்காதல் பிறக்கிறது.இதை சரிசெய்ய, அந்த வருடங்களில் 7,9,10,12 ஆம் வருடங்களில் 10 நாட்களுக்கு ஏதாவது கடலோரம் அல்லது மலையோரம் உள்ள சுற்றுலாஸ்தலம் ஒன்றிற்குச் சென்று அங்கே ஜாலியாக இருந்துவிட்டு வர வேண்டும்.குழந்தைகளை உடன் அழைக்காமல் சென்றால் நல்லது.


No comments:

Post a Comment